மூளை
நமது உடலில் உள்ள அத்தனை அங்கங்களையும் கட்டுப்படுத்தும் ஒரே உறுப்பு நரம்புத் தொகுதியாகும்.
அவ்வாறான சிறப்பு மிக்க நரம்புத் தொகுதியென்பது மூளையையும், முண்ணாணையும் உள்ளடக்கியது.
அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது தான் நரம்புத் தொகுதி.
அதில் நாம் யோசித்துச் செய்யும் செயற்பாடுகள் மூளையலும், நம்மை அறியாது செய்யும் செயற்பாடுகள் முண்ணாணாலும் கட்டுப் படுத்தப் படுகின்றன.
நமது உடலில் முக்கிய அம்சம் வகிப்பதுமூளையாகும். எத்தனையோ முக்கியமான பகுதிகள் நம் உடலில் காணப்பட்டாலும் எவ்வாறு வியாபாரமின்றி வர்த்தகம் இல்லையோ அது போல மூளை இன்றி அவை எதுகும் பிரயோசனமற்றது ஆகும்.
அதுமட்டுமன்றி நமது ஞாபக சக்தியும் இதிலேயே தங்கியுள்ளது.







